திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கொருக்கை அரசு பாலிடெக்னிக்கில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரமோகன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் மரம் நட்டு தொடங்கி வைத்தார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
சென்னை அன்னை பழமுதிர்ச்சோலை நிறுவனர் முனைவர் அரிமா.ரவிச்சந்திரன், கொறுக்கை ஊராட்சி மன்றத் தலைவர்ஜானகிராமன், கல்லூரி கண்காணிப்பாளர் குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து மரம் நட்டனர்.
கொறுக்கை பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி , மன்ற உறுப்பினர் கலாவிஜேந்திரன் மற்றும் கல்லூரியை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும், கொறுக்கை வாழ் மக்கள் 72 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைவருக்கும் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.