கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாலை மலர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து போலீசார் வாகன 

சோதனையில் ஈடுபட்டனர்.

மன்னை ரெயில்வே சாலை அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் நடந்த சோதனையில் முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சோதனையில் போக்குவரத்து காவலர்கள் ரமேஷ்குமார், 

உதவி ஆய்வாளர் சிங்காரவேலன் ஆகியோர் ஈடுபட்டனர்.