திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு 20 புதிய கம்ப்யூட்டர்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.