தேனி:
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு கலைவாணி வாசம் கொள்ளும் நெல்லில் மாணவர்கள் அகரத்தை எழுதி மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள், பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர்கள் அய்யன்மூர்த்தி, தீபகணேஷ், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.