உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் வீட்டு பார்க்கிங்கில் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

தனது மோட்டார் சைக்கிளை வீட்டு பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கினார். விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

விருகம்பாக்கம், ஏ.வி.எம் அவின்யூ பகுதியை சேர்ந்தவர் அன்புவேல் (வயது45) கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கினார்.

பின்னர் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது கண்டு அன்புவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.