வேதாரண்யம்:
தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.
அதன்படி வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல் பகுதியில் உள்ள வேதாரண்யேஸ் வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை நாகை தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) அமுதா தலமையில் அளவிடும் பணி நடைபெற்றது.
இப்பணியில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கோவில் நில அளவையர் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.