உள்ளூர் செய்திகள்

செல்போன் கேட்டு மிரட்டியவர் கைது

கணேசன். பஸ் நிறுத்த பகுதியில் நின்றார். அங்கு சின்னதுரை என்பவர் வந்தார்,அவர், கணேசனை வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினார்

மாலை மலர்

கடலூர்;

சிதம்பரம் முத்துமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் கணேசன். (வயது 26). இவர் கஞ்சி தொட்டிமுனை பஸ் நிறுத்த பகுதியில் நின்றார். அப்போது அங்கு சின்னதுரை என்பவர் வந்தார். அவர் கணேசனை வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினார்.

இதுகுறித்து புகாரின் பேரில் சின்னதுரையை சிதம்பரம் டவுன் போலீசார் கைதுெசய்தனர்.