கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பெருமாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது50). இவர் நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது மரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.