பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் 
உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

மதுக்கூர் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

மாலை மலர்

மதுக்கூர்:

மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூத்தாக்குறிச்சி ஊராட்சி 

ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு 

விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், 

பெற்றோர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் தலைமையாசிரியர் செல்வராணி பள்ளி மேலாண்மைக்குழுவில் ஆசிரியர் பங்கு பெற்றோர் பங்கு குழந்தைகளின் உரிமைகள், 

பள்ளி வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு கருத்துக்கள் 

முன்வைக்கப்பட்டன. 

இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொள்வதன் 

மூலம் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று 

கருதப்படுகிறது. 

முடிவில் உதவி ஆசிரியர் சித்திரச் செல்வி நன்றி கூறினார்.