வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிப்படைந்து
வெறும் 7 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள்
அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.