கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

வல்லம் சிகிச்சை மையத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்

வல்லம் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிப்படைந்து 

வெறும் 7 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் 

அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.