புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்டவர்கள். 
உள்ளூர் செய்திகள்

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி

சாம்பவர்வடகரை அம்பிகை சமுதாய நலக்கூடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை அம்பிகை சமுதாய நல கூடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் செங்கோட்டை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வி சிறப்புரையாற்றினார். 

இப்பயிற்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT