கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினஉறுதி மொழி எடுத்த போலீசார். 
உள்ளூர் செய்திகள்

தென்காசி எஸ்.பி. அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்து. நிகழ்ச்சியில் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின்  பேரில் கூடுதல்  போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன் தலைமையில்  மாவட்ட காவல் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.