உள்ளூர் செய்திகள்

இளம்பெண் திடீர் மரணம்- போலீசார் விசாரணை

வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரேவதி இறந்து கிடந்தார். கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suresh K Jangir

சென்னை:

சென்னை கே.கே நகர் அடுத்த விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ரேவதி (வயது30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரேவதி இறந்து கிடந்தார். அவர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.