ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மன்ற முதல் கூட்டம் குமாரசாமி ராஜா நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், 42 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவ படங்களை நகராட்சி அலுவலகத்தில் புதியதாக வைக்கப்பட வேண்டும், சொத்து வரி உயர்வு குறித்த விளக்கம் மற்றும் அரசாணைக்கு ஒப்புதல் உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கேள்வி நேரத்தின் போது, சொத்து வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அதிமுக கவுன்சிலர்களான சோலை மலை மற்றும் மீனாட்சி ஆகிய இருவர் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.