டிடிவி தினகரன் 
உள்ளூர் செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தி.நகரில் உள்ள சசிகலா வீட்டில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரிக்க உள்ளது.

மாலை மலர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னையில் இன்னும் சற்று நேரத்தில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது. தி.நகரில் உள்ள சசிகலா வீட்டில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமமுக செயல்பட்டு வருவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.