திருவள்ளூர்:
சென்னை, அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயத48). மணல் லாரி டிரைவர். இவர் திருவள்ளூரை அடுத்த பட்டறை பெருமந்தூர் பகுதியில் இயங்கும் அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க வந்தார்.
பின்னர் அவர் லாரியின் மேல் தூங்கினார். இந்த நிலையில் குமார் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.