புதுச்சேரி:
புதுவை மின்துறை செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர், பூமியான்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக்நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய மின் அலுவலகத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் மின்பாக்கி வைத்துள்ள இணைப்புகள் துண்டிக்கப்படும். அதன்பிறகு நிலுவைத்தொகை முழுவதையும் செலுத்திய பிறகே மறுமின் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.