உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் கைது

ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தருமபுரி:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் அவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார் என பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு பா.ம.க கவுர தலைவரும், பென்னாகரம் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென பா.ம.கவினர் மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

பின்னர் போலீசார் பா.ம.க. எம்.எல்.ஏக்கள். ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன் மற்றும் ஏராளமான பா.ம.க.வினரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இதில் 500-க்கு மேற்பட்டோர் கைது செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.