திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் 
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் கட்டண தரிசனம் ரத்து

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கட்டண முறையில் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ 20 மற்றும் ரூ 250 தரிசன கட்டணச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் மட்டுமே பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.