கோவில் 
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடல், கடைகள் திறப்பு நேரத்திற்கு கட்டுப்பாடு?

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஏற்கனவே நடைமுறையில் இருந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களை மூட வேண்டும். கடைகள் திறப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுதினத்தில் இருந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.