பண்ருட்டி:
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலரும் கூடுதல் ஆட்சியருமான ரஞ்ஜீத்சிங் பண்ருட்டி நகராட்சி விழமங்கலம், ஆண்டிக்குப்பம் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்கள், நகராட்சி அலுவலகம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தாசில்தார் சிவா. கார்த்திகேயன், மண்டல தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் கொளஞ்சி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உடனிருந்தனர்.