முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
உள்ளூர் செய்திகள்

தேசிய உழவர் நாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தேசிய உழவர் நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பது போல் எந்நாளும் காப்போம். உழவர்களுடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து அதற்கு உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.