உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்தவர் நகுனி.இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார்.

பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT