தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை- போலீசார் விசாரணை

ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

ஓசூர்:

திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் ஓசூர் ராம்நகர் பகுதியில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஆகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.