மதுரை ஆதீனம் 
உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடியுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு

விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து சுமார் 8 மணியளவில் டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.

இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மதுரை ஆதீனம் சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள்.. இந்திய மொழிகளை ஊக்குவிக்கவே தேசிய கல்விக் கொள்கை- பிரதமர் மோடி பேச்சு