மாவட்ட கலெக்டர் பேட்டி 
உள்ளூர் செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்துக்கு காரணமான உரிமையாளர் கைது

நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி விபத்துக்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நெல்லை:

நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, நேற்று இரவு கல் குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகினர் என மீட்கப்பட்ட தொழிலாளி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், கல்குவாரியில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

கல்குவாரியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில், கல்குவாரியில் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பாறைகள் சரிவை பொருட்படுத்தாமல் கல்குவாரியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு பாளையங்கோட்டை சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ள்ளனர்.

இதையும் படியுங்கள்...பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்