மு.க.ஸ்டாலினை சந்தித்த கேரள மந்திரி 
உள்ளூர் செய்திகள்

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த கேரள மந்திரி

கேரளாவில் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அம்மாநில மந்திரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சென்னை:

கேரள மாநிலத்தில் வரும் 9ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களை கேரளா சார்பில் அம்மாநில மந்திரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கேரள மந்திரி ராதாகிருஷ்ணன் இன்று காலை சந்தித்தார். அப்போது மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.