திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் மசாஜ் சென்டர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு விபச்சாரம் நடப்பதாக திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாலுகா போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் சரண்யா உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.