குவைத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தில் பயணம் செய்த மராட்டிய மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமத் சதாம்(32) என்பர் புகைபிடித்து ரகளையில் ஈடுபட்டார்.
இதுபற்றி விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் முகமத் சதாமை அதிரடியாக கைது செய்து சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.