திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த இளம்பெண் மாயமாகிவிட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண் எங்கு உள்ளார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மாயமான மணப்பெண் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்பதற்காக திருவண்ணாமலை தாலுகா போலீசார் பெங்களூர் சென்றனர்.
இருந்தபோதிலும் அந்த பெண்ணை இன்னும் மீட்க முடியவில்லை. அவர் எங்கு பதுங்கி உள்ளார் என்பது தெரியவராததால் தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர். இதன் காரணமாக இன்று காலை நடைபெற வேண்டிய திருமணம் நடைபெறவில்லை. இது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.