அருமனை:
அருமனை பகுதி தோட்டத்தில் இருந்து விவசாயி ஒருவர் பழக்கடைக்கு வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தார். அதில் ஒரு தார் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியது. அதற்கு காரணம் அந்த செவ்வாழை வாழைத்தாரில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் வாழைகள் ஒரு சேர இருந்தது தான்.
இதனை கேள்விப்பட்ட சுற்று வட்டார மக்கள் திரண்டு வந்து வியப்புடன் பார்த்து ரசித்தனர்.