மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் நியூ காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது.33) ஆட்டோ டிரைவர். புலியூர் தைலமர காட்டு பகுதியில் மரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.