உள்ளூர் செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலி- கிராமமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள்.ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை மலர்

திருவள்ளூர்:

ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.