அபராதம் 
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறிய 12 வாகனங்கள் பறிமுதல்- ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல்

உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மாலை மலர்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் காமராஜர் சாலை, காந்தி ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.