கோப்புப் படம் 
உள்ளூர் செய்திகள்

வணிகர் தினத்தன்று சென்னையில் ஓட்டல்களுக்கு காலையில் விடுமுறை

திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் சங்க மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மை சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ம் தேதி 39-வது வணிகர் தினம், தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், வணிகர் தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் சென்னையில் ஓட்டல்களுக்கு காலையில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை ஓட்டல்கள் சங்கம் செயலாளர் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.