மொரப்பூர்:
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் சேலம் மண்டல அளவில் நடைப்பெற்ற மேஜைப் பந்து அணிக்காக தேர்வு போட்டிகள் நடைபெற்றது.
இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் நரேன்குமார், முதல் இடமும், கிரிஷ்வர்மா 4-வது இடமும், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் பிரியதர்ஷன் 2-ம் இடம் பிடித்து சேலம் மண்டலத்திற்கான அணியில் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் தாளா ளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பாவனி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ், ஆகி யோர் பாராட்டினர். மாண வர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் செல்வம், பள்ளி நிர்வாகம் பாராட்டியது.