கலெக்டர் தீபக்ஜேக்கப். 
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

கூட்டம் நாளை (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.மாற்று திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.