வாகனங்கள் பறிமுதல். 
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்தல்

காரைக்குடி அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனங்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

மாலை மலர்

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அடிக்கடி ரேசன்அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு  புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் அந்த வழியே வந்த மினிவேனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.  பொதுமக்கள் வேனை சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து அந்த வேன் குடிமைப்பொருள் குற்ற  புலனாய்வுதுறை சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

வேனில் சுமார் 5 டன் அளவிலான ரேசன் அரிசி இருந்தது. இதற்கிடையே மேலும் 2 இருசக்கர வாகனங் களில்  கடத்தி வரப்பட்ட சுமார் 300 கிலோ ரேசன்அரிசியும்  பறிமுதல் செய்யப்பட்டது. 

கடத்திவர பயன்படுத்திய வாகனங்களின் பதிவெண்களை வைத்து உரிமையாளர்களின்மீது வழக்கு பதியப் படும் என எஸ்.ஐ. முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.