உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் தின விழாவில் பல் மருத்துவ முகாம்

குழந்தைகள் தின விழாவில் பல் மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பள்ளி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடி நாகநாதபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அமுதா, 30-வது வார்டு கவுன்சிலர் அமுதா சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். சாந்தி பல் மருத்துவமனை மருத்துவர்கள் நவீனா இளங்கோ, டவுமி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். குழந்தைகளுக்கு டூத்பிரஸ், பேஸ்ட், உண்டியல் வழங்கப்பட்டது.

இதில் பள்ளி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.