சிவகங்கை
அ.தி.முக. 51-வதுஆண்டு விழாவையொட்டி சிவகங்கை நகர் அ.தி.மு.க. வட்டசெயலாளர் சேதுபதி ஏற்பாட்டில் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் சிவகங்கை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், காமராஜர் காலனி அருகே உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவை வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன், அவைத்தலைவர் பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.