தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவி க்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு பொதுவி னியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை யத்துக்கு எடுத்து வரப்பட்ட ன. பின்னர் நெல் மூட்டை கள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் ஆந்திராவில் இருந்து 1300 டன் டி.ஏ.பி. உரம் சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது.