உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் சாவு

கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.உறவினர் வீட்டில் உள்ள பிரிட்ஜ்யை திறந்த போது எதிர்பாராதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.

மாலை மலர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சந்தோஷ் (வயது 14).

இவர் கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது உறவினர் வீட்டில் உள்ள பிரிட்ஜ்யை திறந்த போது எதிர்பாராதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது.

இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.