உள்ளூர் செய்திகள்

மக்காச்சோள படைப்புழு குறித்த கருத்தரங்கு

ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் மக்காச்சோள படைப்புழு குறித்து விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.

மாலை மலர்

ஆத்தூர்: சேலம், ஏத்தாப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி மற்றும் கருத்துக்காட்சி அளிக்கப்பட்டது.   

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைமை இயக்குநர் வெங்கடாசலம் மற்றும் சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர்  கலந்து கொண்டு  வேளாண் கல்லூரி மாணவர்கள்  மற்றும் விவசாயிகளுக்கு மக்காச்சோள படைப்புழு மேலாண்மை குறித்து கருத்துக்காட்சியும் , செயல்முறை விளக்கங்களையும்  எடுத்துரைத்தனர்.