உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுடன் வாலிபர் மாயம்

சேலத்தில் குழந்தைகளுடன் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

சேலம்

சேலம் அருகே உள்ள மாமாங்கம் அடுத்த ஜாகிர் ரெட்டிப்பட்டி குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). இவரது மனைவி மணிமேகலை  (27) இந்த தம்பதிகளுக்கு ரோஹித் (10)முகேஷ் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே  ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு மாதமாக மணிமேகலை அழகாகபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி தனது 2 மகன்களுடன் மனைவியை பார்க்க வந்த சீனிவாசன் குழந்தைகளுடன் திடீரென மாயமானார் . 

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து மாயமான சீனிவாசன் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.