சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதி சேர்ந்தவர் சண்முககனி (வயது 27) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இவர் கடந்த 10-ந் தேதி வெளியே சென்றவர் காணவில்லை. இவர் காணாமல் போன அன்று ஆரஞ்சு கலர் சுடிதார் அணிந்திருந்தார். சண்முககனி பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் கிச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்.