ஏற்காடு:
அக்னி வெயில் காலங்களில் ஏற்காட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 3 தினங்களாக கடும்குளிர் நிலவி வருகிறது.
அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் சொட்டர், ஜர்கின். போன்ற குளிர் தாங்கும் உடைகளை அணிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் ஏற்காட்டில் குளிர் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.