பனமரத்துப்பட்டி,
சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின் பேரில் மல்லூர் போலீஸ் நிலையத்தில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமை வகித்தார். இதில் மல்லூர் போலீல் நிலையத் தில் நிலுவையில் இருந்த 8 புகார்களின் மீது மனுதாரர்கள், எதிர் மனுதாரர்களை அழைத்து விசாரித்து நடவ டிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப் பட்டது.
அதேபோல் நடப்பு புகார்கள் மீதும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.