மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 9 ஆண்டுகளாக  பணியாற்றிவரும் தற்காலிக பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இது தொடர்பாக மேலும் தபால் நிரப்பும் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட செயலர் ரத்தினவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.