உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாலை மலர்

சேலம்:

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்  சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம்  அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகமது அலி முன்னிலை வகித்தார்.  மாவட்ட தலைவர் திருமுருகன், செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 

கூட்டத்தில்  டாஸ்மாக் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழஙக வேண்டும்,  டாஸ்மாக் நஷ்டம்குறித்து வெள்ளை அறிக்கை     வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.