உள்ளூர் செய்திகள்

அன்னதானப்பட்டியில் சாலையோரம் இறந்து கிடந்த முதியவர்

அன்னதானப்பட்டியில் சாலையோரத்தில் இறந்து கிடந்த முதியவரை போலீசில் புகார் செய்தனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில்  அருகே  60 வ யது மதிக்க தக்க முதியவர் நேற்றிரவு இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள்  அன்னதானப்பட்டி    போலீசாருக்கு தகவல்  தெரிவித்தனர். 

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார்   அவரது உடலை   மீட்டு   பிரேத பரிசோதனைக்காக   சேலம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார்    என்ற விவரம் தெரியவில்லை. 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.